Friday 3rd of May 2024 10:11:18 PM GMT

LANGUAGE - TAMIL
-
திருகோணமலையில் கிளைமோர்க் குண்டுகள் இரண்டு மீட்பு!

திருகோணமலையில் கிளைமோர்க் குண்டுகள் இரண்டு மீட்பு!


திருகோணமலை மாவட்டம் மூதூர் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மேம்கமாம் பகுதியில் உள்ள வாய்க்காலுக்கு அருகில் இருந்து இரண்டு கிளைமோர் குண்டுகள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இரகசிய தகவலின் அடிப்படையில், இந்த கிளைமோர்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு குண்டுகளையும் செயலிழக்க செய்வதற்காக மூதூர் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

திருகோணமலை தலைமையக விசேட அதிரடிப்படையினர் குறித்த கிளைமோர் குண்டுகளை செயலிழக்க செய்ததாகவும் பொலிஸார் கூறினர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE